ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

புலிகளின் புதிய தலைவர் சீலன் கைது! விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்த திட்டம்!

புலிகளின் புதிய தலைவர் என இலங்கை அரசால் அழைக்கபட்ட சீலன் இந்தோனேசியாவின் மேடான் நகரில் வைத்து இலங்கை புலனாய்வு பிறிவினரால் கைது செய்யபட்டுள்ளார். குமரன் பத்மநாபன் வழங்கிய தகவலின் அடிபடையில் இந்தோனேசியன் பொலிசாரின் உதவியுடன் இவர் கைது செய்யபட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி அளவில் இவர் கைது செய்யபட்டு மிஹின் விமானசேவையின் மூலம் கொழும்புக்கு அழைத்து வரபட்டுள்ளார். இவரின் கைது தொடர்பான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டன் நோக்கி புறபட்ட விமானம் மேலும் 3 விமானங்கள் விசேட படையினரால் திருப்பி அழைக்கபட்டு தேடுதல் நடத்தப்படதன் மூலம் இவர் கைது அம்பலம் ஆகியுள்ளது.

இலங்கை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒரு மேலதிகாரி புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டமான் ஆப்ரிக்காவின் கான நாடில் வசித்து வருவதாக சீலன் தகவல் வெளியிட்டதாக அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியுள்ளார்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.