புலிகளின் புதிய தலைவர் என இலங்கை அரசால் அழைக்கபட்ட சீலன் இந்தோனேசியாவின் மேடான் நகரில் வைத்து இலங்கை புலனாய்வு பிறிவினரால் கைது செய்யபட்டுள்ளார். குமரன் பத்மநாபன் வழங்கிய தகவலின் அடிபடையில் இந்தோனேசியன் பொலிசாரின் உதவியுடன் இவர் கைது செய்யபட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி அளவில் இவர் கைது செய்யபட்டு மிஹின் விமானசேவையின் மூலம் கொழும்புக்கு அழைத்து வரபட்டுள்ளார். இவரின் கைது தொடர்பான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டன் நோக்கி புறபட்ட விமானம் மேலும் 3 விமானங்கள் விசேட படையினரால் திருப்பி அழைக்கபட்டு தேடுதல் நடத்தப்படதன் மூலம் இவர் கைது அம்பலம் ஆகியுள்ளது.
இலங்கை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒரு மேலதிகாரி புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டமான் ஆப்ரிக்காவின் கான நாடில் வசித்து வருவதாக சீலன் தகவல் வெளியிட்டதாக அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியுள்ளார்.
Blogger Tricks
Pages
Popular
-
இரண்டாம் இணைப்பு . தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் கா...
-
.யாழுக்கு விஜயம் செய்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ரெப் நேற்று மாங்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண முதலமைச்சர...
-
விஜயை விட மோகன் லால் தான் மாஸ் விஜய் படப்பிடிப்பின்போது யாருடனும் பேசமாட்டார். ஆனால் மோகன்லால் நல்ல அறிவுரைகளை வழங்குவார். யதார்த்தமாக நடிப்...
-
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உற...
-
வடபகுதியில் நிலவும் சீறற்ற கால நிலை காரணமாக 532 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது . வ...
-
நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் தொழிற்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச...
-
என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும் போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்ப...
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்டதாக இலங்கையில் உள்ள அமெர...
-
எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் ( வயது 17) கண்ணை 'ஈட்டி' பதம் பார்த்த நிலையில் எம்பில...
-
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு வதை செய்வதை நிறுத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை , அவருக்கு நீதி பெற்றுக் கொட...
Moto GP News
Basketball News
Formula 1 News
7:07 AM
இலங்கையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க
நியமிக்கப்பட்டுள்ளாரென இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது . எதிர்வரும் பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது .
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான கோலித குணதிலக்க விமானப்படையின் தலைமை படை அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார் .
விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க.
இலங்கையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க
நியமிக்கப்பட்டுள்ளாரென இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது . எதிர்வரும் பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது .
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான கோலித குணதிலக்க விமானப்படையின் தலைமை படை அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார் .
7:06 AM
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இலங்கை இராணுவத்திற்கு எதிராக
சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஈழவாதி என்பது நாட்டுக்கு இரகசியமான விடயமல்ல .
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட பிரதிநிதி ஸ்டீபன் ஜே . ராபிடம் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக மன்னார் ஆயர் கூறியுள்ளார் .
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் நடத்திய இரசாய ஆயுத தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்த வந்த மக்கள் தன்னிடம் கூறியதாகவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார் .
மன்னார் ஆயர் இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளமை இது முதல் முறையல்ல .
விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயமாக வைத்திருந்தமை , மடு மாத சொரூபத்தை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று வைத்திருந்தமை தொடர்பில் மன்னார் ஆயர் இதுவரை தனது வாயால் வார்த்தைகள் எதனையும் வெளியிடவில்லை .
தமது கட்டளையின் கீழ் மக்களை பயங்கரவாத ஆட்சியின் கீழ் வைத்திருந்த விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்கள் இராணுவத்தினரே பாதுகாப்பாக காப்பற்றினர் .
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமையை ஏற்படுத்திய இராணுவத்தினருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும் .
போர் நடைபெற்ற காலத்தில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களையும் இராணுவத்தினரையும் ஆபத்துக்கு உள்ளாகியது விடுதலைப் புலிகள்தான் என்பதை மன்னார் ஆயர் அறியாதவர் அல்ல .
பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை இராணுவம் ஒழுக்கமான சட்டரீதியான இராணுவம் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை .
பிரபாகரனின் நிழலாக மாறியுள்ள மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை இராணுவத்தினர் மீது சுமத்தியுள்ள போர் குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதுடன் அதற்கு எதிர்ப்புகளையும் வெளியிடுகிறோம் .
நாட்டின் ஒருமைப்பாடு , இறையாண்மையை ஆபத்தில் தன்ளும் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தேசத்துரோக , தமிழ் இனவாத , பிரிவினைவாத , பயங்கரவாத சார்பான வெயற்பாடுகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என வர்ணசிங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இராணுவத்தின் மீதான பலி சுமத்தல்களை முற்றாக எதிர்க்கின்றோம். ஜாதிக ஹெல உறுமய.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இலங்கை இராணுவத்திற்கு எதிராக
சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஈழவாதி என்பது நாட்டுக்கு இரகசியமான விடயமல்ல .
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட பிரதிநிதி ஸ்டீபன் ஜே . ராபிடம் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக மன்னார் ஆயர் கூறியுள்ளார் .
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் நடத்திய இரசாய ஆயுத தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்த வந்த மக்கள் தன்னிடம் கூறியதாகவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார் .
மன்னார் ஆயர் இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளமை இது முதல் முறையல்ல .
விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயமாக வைத்திருந்தமை , மடு மாத சொரூபத்தை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று வைத்திருந்தமை தொடர்பில் மன்னார் ஆயர் இதுவரை தனது வாயால் வார்த்தைகள் எதனையும் வெளியிடவில்லை .
தமது கட்டளையின் கீழ் மக்களை பயங்கரவாத ஆட்சியின் கீழ் வைத்திருந்த விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்கள் இராணுவத்தினரே பாதுகாப்பாக காப்பற்றினர் .
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமையை ஏற்படுத்திய இராணுவத்தினருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும் .
போர் நடைபெற்ற காலத்தில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களையும் இராணுவத்தினரையும் ஆபத்துக்கு உள்ளாகியது விடுதலைப் புலிகள்தான் என்பதை மன்னார் ஆயர் அறியாதவர் அல்ல .
பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை இராணுவம் ஒழுக்கமான சட்டரீதியான இராணுவம் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை .
பிரபாகரனின் நிழலாக மாறியுள்ள மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை இராணுவத்தினர் மீது சுமத்தியுள்ள போர் குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதுடன் அதற்கு எதிர்ப்புகளையும் வெளியிடுகிறோம் .
நாட்டின் ஒருமைப்பாடு , இறையாண்மையை ஆபத்தில் தன்ளும் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தேசத்துரோக , தமிழ் இனவாத , பிரிவினைவாத , பயங்கரவாத சார்பான வெயற்பாடுகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என வர்ணசிங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
7:05 AM
சிராணி பண்டாரநாயக்கவுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதற்காக சட்டத்தரணிகள் முயற்சி.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு வதை செய்வதை நிறுத்தும்படி
அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை , அவருக்கு நீதி பெற்றுக் கொடுப்பதற்காக சகல வழிகளிலும் முயற்சி எடுக்கப் போவதாக ஜனாநாயகத்துக்காக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் .
இது தொடர்பில் , சட்டத்தரணி ஜே . சி வெலியமுன கூறியுள்ளதாவது ,
சட்டவிரோதமாக பதவி விலக்கப்பட்டு ஒருவருடமாகி விட்ட போதிலும் கலாநிதி . சிராணி பண்டாரநாயக்க இப்போதும் வதை செய்யப்பட்டு வருகின்றார் .
அடிக்கடி நீதிமன்றங்களுக்கு அல்லது இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வரும்படி அழைப்பாணைகள் இவருக்கு அனுப்பபடுகின்றன .
இது நிறுத்தப்பட வேண்டும் . இதற்காக சிவில் சமூக குழுக்களுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் சேர்ந்து சட்டத்துறை நண்பர்கள் பல இயக்கங்களை தொடங்கவுள்ளனர் என அவர் மேலும் கூறினார்
.
அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை , அவருக்கு நீதி பெற்றுக் கொடுப்பதற்காக சகல வழிகளிலும் முயற்சி எடுக்கப் போவதாக ஜனாநாயகத்துக்காக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் .
இது தொடர்பில் , சட்டத்தரணி ஜே . சி வெலியமுன கூறியுள்ளதாவது ,
சட்டவிரோதமாக பதவி விலக்கப்பட்டு ஒருவருடமாகி விட்ட போதிலும் கலாநிதி . சிராணி பண்டாரநாயக்க இப்போதும் வதை செய்யப்பட்டு வருகின்றார் .
அடிக்கடி நீதிமன்றங்களுக்கு அல்லது இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வரும்படி அழைப்பாணைகள் இவருக்கு அனுப்பபடுகின்றன .
இது நிறுத்தப்பட வேண்டும் . இதற்காக சிவில் சமூக குழுக்களுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் சேர்ந்து சட்டத்துறை நண்பர்கள் பல இயக்கங்களை தொடங்கவுள்ளனர் என அவர் மேலும் கூறினார்
.
7:02 AM
நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் தொழிற்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேற்படி கலந்துரையாடல் நீர்வேலிää கைத்தொழில் சங்க மண்டபத்தில் இன்றைய தினம் (10) இடம்பெற்றுள்ளது.
இதன்பிரகாரம் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் கொள்வனவுää உற்பத்திகள்ää அவற்றுக்கான சந்தைவாய்ப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள்ää மூலப்பொருட்களை சங்கத்தின் ஊடாக உற்பத்தியாளர்களுக்கு வழங்கி உற்பத்திகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இதன்போது உற்பத்திகள் நவீன தரத்திற்கும் அவற்றின் சந்தை வாய்ப்பிற்கும் ஏற்ற விதமாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்; மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
அத்துடன்ää தொழிலாளர்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் சிவகெங்காதரன்ää காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத் தலைவர் பத்மநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீர்வேலி கைத்தொழில் சங்க உற்பத்திகள் தொடர்பில் கலந்துரையாடல்
நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் தொழிற்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேற்படி கலந்துரையாடல் நீர்வேலிää கைத்தொழில் சங்க மண்டபத்தில் இன்றைய தினம் (10) இடம்பெற்றுள்ளது.
இதன்பிரகாரம் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் கொள்வனவுää உற்பத்திகள்ää அவற்றுக்கான சந்தைவாய்ப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள்ää மூலப்பொருட்களை சங்கத்தின் ஊடாக உற்பத்தியாளர்களுக்கு வழங்கி உற்பத்திகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இதன்போது உற்பத்திகள் நவீன தரத்திற்கும் அவற்றின் சந்தை வாய்ப்பிற்கும் ஏற்ற விதமாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்; மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
அத்துடன்ää தொழிலாளர்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் சிவகெங்காதரன்ää காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத் தலைவர் பத்மநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
1:19 AM
காஜல் மீது அநியாய கோபத்தில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள்
விஜயை விட மோகன் லால் தான் மாஸ்
விஜய் படப்பிடிப்பின்போது யாருடனும் பேசமாட்டார். ஆனால் மோகன்லால் நல்ல அறிவுரைகளை வழங்குவார். யதார்த்தமாக நடிப்பது எப்படி என்பது குறித்த அறிவுரை கொடுப்பார். ரொம்ப நைஸ் அவர். ஜில்லாவை பொறுத்தவரை விஜய் மாஸ் என்றால் மோகன்லால் மாஸுக்கும் மாஸ். அவரு இடத்துக்கு யாரும் வரமுடியாது என்றாராம். இப்போ அது தான் பத்திகிட்டு இருக்கு.
என்றதால் காஜல் மீது அநியாய கோபத்தில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள். இணைய தளத்தில் பெரும் அக்க போராக இந்த விஷயம் ஓடுகிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த படப்பிடிப்பின் இடையே ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த காஜல் அகர்வால், "விஜய்யுடன் துப்பாக்கியில் நடித்தபோது நல்ல பழக்கம் என்பதால் அவருடன் நடித்ததில் எனக்கு எவ்வித டென்ஷனும் இல்லை. ஆனால் முதன்முதலாக கேரளா சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த காட்சிகளில் நான் மிகவும் மகிழ்ச்சியானேன். அவருடன் நடித்ததை நான் பெருமையுடன் நினைக்கிறேன். அவருக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு விரைவில் நிறைவேறும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. இத்தோடு விட்டிருந்தால் ஓகே, மேலும்,
விஜய் படப்பிடிப்பின்போது யாருடனும் பேசமாட்டார். ஆனால் மோகன்லால் நல்ல அறிவுரைகளை வழங்குவார். யதார்த்தமாக நடிப்பது எப்படி என்பது குறித்த அறிவுரை கொடுப்பார். ரொம்ப நைஸ் அவர். ஜில்லாவை பொறுத்தவரை விஜய் மாஸ் என்றால் மோகன்லால் மாஸுக்கும் மாஸ். அவரு இடத்துக்கு யாரும் வரமுடியாது என்றாராம். இப்போ அது தான் பத்திகிட்டு இருக்கு.
என்றதால் காஜல் மீது அநியாய கோபத்தில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள். இணைய தளத்தில் பெரும் அக்க போராக இந்த விஷயம் ஓடுகிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த படப்பிடிப்பின் இடையே ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த காஜல் அகர்வால், "விஜய்யுடன் துப்பாக்கியில் நடித்தபோது நல்ல பழக்கம் என்பதால் அவருடன் நடித்ததில் எனக்கு எவ்வித டென்ஷனும் இல்லை. ஆனால் முதன்முதலாக கேரளா சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த காட்சிகளில் நான் மிகவும் மகிழ்ச்சியானேன். அவருடன் நடித்ததை நான் பெருமையுடன் நினைக்கிறேன். அவருக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு விரைவில் நிறைவேறும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. இத்தோடு விட்டிருந்தால் ஓகே, மேலும்,
9:38 PM
புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார்!– இலங்கை அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வன்னிப் போரின் போது பதினொரு மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்தும் சமிக்ஞை கருவிகள், நோர்வேயின் செய்மதித் தொடர்பாடல் சாதனங்கள் போன்றனவற்றை புலிகள் பயன்படுத்தியுள்ளனர்.
30 ஆண்டுகள் பிரபாகரன் செய்த போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பத் தவறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
விஸ்வநாதன் ருத்ரகுமாரன் மற்றும் அடெல் பாலசிங்கம் ஆகியோருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வன்னிப் போரின் போது பதினொரு மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்தும் சமிக்ஞை கருவிகள், நோர்வேயின் செய்மதித் தொடர்பாடல் சாதனங்கள் போன்றனவற்றை புலிகள் பயன்படுத்தியுள்ளனர்.
30 ஆண்டுகள் பிரபாகரன் செய்த போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பத் தவறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
விஸ்வநாதன் ருத்ரகுமாரன் மற்றும் அடெல் பாலசிங்கம் ஆகியோருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)