ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

ஊர்காவற்துறை புதிய நீதிமன்றக் கட்டிடம் திறப்பு


நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக முற்றாக அழிவடைந்த ஊர்காவற்துறையில் நீதிமன்ற கட்டிடத் தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள் மேற்படி புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியினை இன்றைய தினம் (09) திறந்து வைத்தார்.



முன்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சகிதம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட அதிதிகள் மங்கள வாத்தியத்துடனும் மாணவர்களின் இசை அணிவகுப்புடனும் நீதிமன்ற வளாகத்தினுள் அழைத்து வரப்பட்டனர்.



தேசியக் கொடியினை பிரதம நீதியரசர் ஏற்றி வைக்க பெயர்ப்பலகையினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திரை நீக்கம் செய்து வைத்தார்.



புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன்ää நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.



மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து மத குருமார்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.

 

மேற்படி இக்கட்டிடம் 127 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துரையாற்றினார்.

 

இதில் நீதி நிர்வாகத்துறையைச் சேர்;ந்த பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.