ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

ஃபேஸ்புக்கின் புதிய வசதியில் குளறுபடி. பயனாளிகள் அதிருப்தி



ஃபேஸ்புக் தற்போது ஒரு புதிய வசதியை அதன் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் நமது நட்பில் இருப்பவர்கள் ஆன்லைனில் இருந்தால் வலது புறம் உள்ள சாட்டிங் லிஸ்ட்டில் அவர்களது பெயர் தெரியும். தற்போது அதில் WEB அல்லது MOBILE என்று அவர்களது பெயருடன் சேர்த்து தெ

அதாவது நமது நண்பர்கள் ஃபேஸ்புக்கை மொபைலில் இருந்து பார்க்கின்றார்களா? அல்லது லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்பில் இருந்து பார்க்கின்றார்களா? என்பதை அது குறிக்கும்.

இந்த புதிய வசதியால் பல பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மொபைல் போனில் பார்த்துக்கொண்டிருந்தாலும், ஒரு சில பிரெளசர்களை பயன்படுத்தி ஃபேஸ்புக்கை மொபைலில் இருந்து  பார்த்தாலும், அது WEB என்று காண்பிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலே உள்ள படத்தில் நண்பர் பாலாஜி என்பவர் மொபைலில் இருந்துதான் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாக கூறினார். ஆனால் அவர் ஒபரா பிரவுசரில் இருந்து பார்ப்பதால் அது web என்று காண்பிப்பதாக தெரிகிறது. இதுபோன்ற சிறுசிறு குறைகளை ஃபேஸ்புக் நிறுவனம் சரிசெய்ய வேண்டும் என ஃபேஸ்புக் பயனாளிகள் இடையே கருத்து நிலவி வருகிறது.
ரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.