யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகலில் இருந்து பெய்து வரும் மழையினால் அன்றாட வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது .
கடந்த இரண்டு நாட்களாக மப்பும் மந்தாரமுமாக காலநிலை காணப்பட்ட போதிலும் நேற்று பிற்பகலில் இருந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது .
தற்போது மழை பெய்வதுடன் வழமைக்கு மாறாக பாரிய குளிரும் காணப்படுவதினால் பொது மக்கள் தமது நடமாட்டத்தை வெளியால் அதிகளவில் குறைத்துக் கொண்டுள்ளார்கள் .
குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் கடும் குளிர் காணப்படுவதுடன் கடலும் கொந்தளிப்பான நிலமையில் காணப்படுகின்றது . கடலுக்கு தொழிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது .

