ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

இணையத்தின் மூலம் வரிப் பணத்தை செலுத்தும் முறை அறிமுகம் !!

உள்ளூராட்சி சபைகள் மூலம் அறிவிடப்படும் மற்றும் வருடாந்த வரிப் பணங்களை செலுத்துவதற்கு இணையத்தின் ஊடான புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட வுள்ள இப் புதிய முறை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் நடை முறைக்கு வருகிறது. இதன் கீழ் வியாபார வரி, அனுமதிப்பத்திர கட்டணம், நகர வாடகை வீட்டு கட்டணம் உள்ளிட்ட 7 விதமான வரிகளை இணையத்தளத்தின் மூலம் செலுத்த முடியும்.

கட்டணம் செலுத்தியமைக்கான ஆவணத்தை இணைய மின்அஞ்சல் ஊடாக அனுப் புவதற்கும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் நடவடிக்கை எடுத் துள்ளது. இந்த சேவையினை பெற்றுக் கொள்ள www.cmc.lk மற்றும் www.srilanka.lk இணைய த்தளங்களுக்கு பிரவேசிக்கவும்.

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.