ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கினை அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்துக்கு இன்றைய தினம் (21) சென்ற அமைச்சர் அவர்கள் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

