ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

நல்லூரில் வீட்டில் திருட்டு.பன்னிரெண்டு பவுண் தங்க நகைகளை காணவில்லை.




யாழ் . நல்லூர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் ஐந்தரை இலட்சம் ரூபாவுக்கும்
அதிக பெறுமதி வாய்ந்த தங்காபரணங்கள் திருடப்பட்டுள்ளன .

இந்த சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளதுடன் , சுமார் 12 பவுண் தங்காபரணங்களும் , பெறுமதியான மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் திருடப்பட்டுள்ளதாக யாழ் . பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார் .

இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் , யாழ் . பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இதேவேளை , தெல்லிப்பழை பகுதியிலும் வீடொன்றிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் ஆறு இலட்ச ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்காபரணங்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர் .

வீட்டில் எவருமில்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் .

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.