யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை 10 ஆம் திகதிவெள்ளிக்கிழமையும் மறு நாள் சனிக்கிழமையும் இப் பல்கலைக்கழத்தின் கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெறவுள்ளது .
எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 337 பட்டதாரிகளுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன் 49 பேருக்கு , சமுகமளிக்காத நிலையிலும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன .
இவர்களுக்கான பட்டங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் மயில் வாகனம் சிவசூரியா வழங்கிக் கௌரவிக்கவுள்ளார் .

