
மாலைதீவு ஜனாதிபதி யமீன் அப்துல் கையூம் இம்மாத பிற்பகுதியில் இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறுகோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதி யமீனுக்கு இதற்கு முன்னர் அழைப்புக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் . கடந்த மாதம் மரியாதையின் நிமித்தம் ஜனாதிபதி யமீனைச் சந்தித்திருந்த இலங்கை உயர் ஸ்தானிகர் டிச்சன் சரத்சந்திர டிலா மேற்படி கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தார் .
மேற்படி அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி யமீன் மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையேயான இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக சிநேகபூர்வமான முறையில் பலமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்ததுடன் இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய தொடர்புகள் தனது விஜயத்தின் மூலம் மேலும் விரிவடையுமெனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்

