ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

தான் பெற்ற குழந்தையைப் பிறிதொரு பெண்ணிடம் கொடுத்து விட்டு தலைமறைவான தாய்: அம்பாறை பஸ் நிலையத்தில் சம்பவம் !!

அம்பாறை நகர் தனியார் பஸ் நிலையத்தில் வைத்து ஏழு நாட் களான பெண் சிசுவை வேறொரு பெண்ணிடம் கையளி த்துவிட்டு தாய் தலைமறைவாகியுள்ள சம்பவம் இடம் பெற்று ள்ளதாக அம்பாரை நகர பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, தனியார் பஸ் நிலையத்தில் சம்பவ தின த்தன்று மாலை 4.00 மணியளவில் கொழும்பிற்கு செல்வத ற்காக வந்திருந்த இரு பெண்கள் பஸ்ஸுக்காக காத்துக் கொண் டிருந்த போது சிசுவை தூக்கி வைத்துக் கொண்டிருந்த கறுப்பு நிற உடை அணிந்த தாய் ஒருவர் தான் மலசல கூடத்திற்கு செல்ல வேண்டியி ருப்பதால் குழந்தையைக் வைத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் கொடுத்துவிட்டு மலசலகூடம் சென்றுள்ளார்.

மலசலகூடத்திற்கு சென்ற தாய்; அரை மணித்தியாலம் சென்றும் திரும்பி வராத தையடுத்து சந்தேகம் கொண்ட பெண் சிசுவுடன் மலசல கூடத்திற்கு சென்று தேடிப் பார்த்தபோது அந்தப் பெண்ணை காணாததையடுத்து பஸ்நிலைய பொலிஸ் சோத னைச்சாவடியில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிசுவை அம்பாறை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மீட் டெடுத்து அம்பாறை போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்தனர் இதனை யடுத்து இச்சிசு பிறந்து 7 நாட்களான சிசு என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள் ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக அம்பாரை நகரப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.