ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

நீர்வேலி கைத்தொழில் சங்க உற்பத்திகள் தொடர்பில் கலந்துரையாடல்




நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் தொழிற்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.



மேற்படி கலந்துரையாடல் நீர்வேலிää கைத்தொழில் சங்க மண்டபத்தில் இன்றைய தினம் (10) இடம்பெற்றுள்ளது.



இதன்பிரகாரம் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் கொள்வனவுää உற்பத்திகள்ää அவற்றுக்கான சந்தைவாய்ப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள்ää மூலப்பொருட்களை சங்கத்தின் ஊடாக உற்பத்தியாளர்களுக்கு வழங்கி உற்பத்திகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்தார்.




இதன்போது உற்பத்திகள் நவீன தரத்திற்கும் அவற்றின் சந்தை வாய்ப்பிற்கும் ஏற்ற விதமாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்; மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.



அத்துடன்ää தொழிலாளர்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.



இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் சிவகெங்காதரன்ää காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத் தலைவர் பத்மநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.